உடுமலை : உடுமலை அருகே சபரி அக்வா பார்ம்ஸ் நிறுவனம் சார்பில், "காக்டஸ் பேக்கேஜூடு டிரிங்கிங் வாட்டர் நிறுவனம்' துவங்கப்பட்டுள்ளது. பல்லடத்தை தலைமையிடமாகக் கொண்டு, சபரி ஹேச்சரீஸ் நிறுவனம் இயங்கி வருகிறது. இதன் தொடர்ச்சியாக சார்பு நிறுவனமான சபரி அக்வா பார்ம்ஸ் நிறுவனத்தின் சார்பில் "காக்டஸ் பேக்கேஜூடு டிரிங்கிங் வாட்டர் நிறுவனம்' உடுமலை அருகே துவக்கப்பட்டுள்ளது. சபரி குரூப் ஆப் கம்பெனியின் நிர்வாகிகள் சுகுமார், ராகுல், வசந்தி ஆகியோர் கூறியதாவது: தமிழகத்திலேயே முதன்முறையாக அனைத்து விதமான உற்பத்தியும் தன்னிச்சையாக இயங்கும் வகையில், (ஆட்டோமெட்டிக் மெஷின்) ஐஎஸ்ஓ தரத்துடன் காக்டஸ் பேக்கேஜூடு டிரிங்கிங் வாட்டர் தயாரிக்கப்படுகிறது. இந்நிறுவனம் தரத்தினையும் சுவையையும் நோக்கமாக கொண்டு உற்பத்தியினை துவக்கியுள்ளது. புதிய தொழில்நுட்பத்துடன், 20 லி., 10லி., 5 லி., 2 லி., 1 லி., 500 மி.லி,, 300 மி.லி,, 200 மி.லி., கொள்ளளவு கொண்ட பாட்டில்களில் தயாரிக்கப்படுகின்றன. இப்பகுதியில் தயாரிக்கப்படும் குடிநீர் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் விற்பனைக்காக அனுப்பப்பட உள்ளது, என்றனர்
Download As PDFPrint this post
Twitter
Facebook
Flickr
RSS





0 comments: (+add yours?)
Post a Comment