EARN MONEY WITHOUT INVESTMENT
திருமூர்த்திமலையில் முதன்முறையாக போலீஸ் "செக்போஸ்ட்' :
உடுமலை அருகேயுள்ள திருமூர்த்திமலை ஆன்மிகம் மற்றும் சுற்றுலா தலமாக உள்ளது. விடுமுறை நாட்களில் இப்பகுதியில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அணை மற்றும் வனப்பகுதியில் பலர் மது அருந்துவது உட்பட அத்துமீறல்களில் ஈடுபடுகின்றனர். இதனால், சுற்றுச்சூழல் பாதிப்பதுடன், பக்தர்கள் வேதனையடைகின்றனர். இந்நிலையில், திருமூர்த்தி அணைப்பகுதியில் தற்கொலை சம்பவங்களும் அடிக்கடி நடக்கின்றன. உடுமலை போலீஸ் உட்கோட்டம் தளி போலீஸ் ஸ்டேஷன் கட்டுப்பாட்டில் திருமூர்த்திமலை பகுதி உள்ளது. குறிப்பிட்ட நாட்கள் மட்டும் தளி போலீசார் இப்பகுதியில் ரோந்து மேற்கொண்டு வந்தனர்.
அத்துமீறல்களை தடுக்கவும், தற்கொலைகளை தடுக்கவும் திருமூர்த்திமலைப்பகுதியில் போலீஸ் செக்போஸ்ட் அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. ஆனால், போலீஸ் தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில், கோவை பள்ளி குழந்தைகள் கடத்தி கொல்லப்பட்ட சம்பவத்தில், கடத்தல்காரர்கள் திருமூர்த்திமலை பகுதிக்கு வந்து சென்றுள்ளனர். போலீஸ் கண்காணிப்பு எதுவும் இல்லாததால் கடத்தல்காரர்கள் இப்பகுதியில் எளிதாக ஊடுருவுகின்றனர்.இதனால், ஏற்படும் பாதிப்புகள் மற்றும் செக்போஸ்ட் அமைக்க வேண்டியதின் முக்கியத்துவம் குறித்து "தினமலரில்' செய்தி வெளியானது. கடந்த மாதம் செக்போஸ்ட் அமைக்க தளி போலீசாரால் இடம் தேர்வு செய்யப்பட்டது.
மேற்கு மண்டல ஐ.ஜி., சிவனாண்டி உத்தரவு அடிப்படையில் நேற்று முதல் திருமூர்த்தி அணை அருகேயுள்ள விருந்தினர் மளிகை பகுதியில் செக்போஸ்ட் செயல்பாட்டிற்கு வந்துள்ளது. செக்போஸ்ட்டில் ஷிப்டுக்கு மூன்று போலீசார் பணியில் ஈடுபட உள்ளனர். வாகன தணிக்கை, அணைப்பகுதியில் ரோந்து, வெளிமாநிலங்களிலிருந்து வரும் வாகனங்களின் எண்களை பதிவு செய்தல், இருசக்கர வாகனங்களில் மதுபாட்டில்களை எடுத்து செல்பவர்கள் மீது நடவடிக்கை எடுத்தல் உட்பட பணிகளை இங்கு நியமிக்கப்பட்டுள்ள போலீசார் மேற்கொள்ள உள்ளனர்.
தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள செக்போஸ்ட்டிற்கு நிரந்தர கட்டடம் அமைக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பல ஆண்டாக கிடப்பில் போடப்பட்டிருந்த கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளதால் இப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். Download As PDF
உடுமலை, மடத்துக்குளம் கிராமங்களுக்கு புதிய எண்கள்: மாவட்ட நிர்வாகம் உத்தரவு
சின்னவீரம்பட்டி 2, குறிஞ்சேரி 3, அந்தியூர் 4, பூலாங்கிணர் 5, வெனசபட்டி 6, கணபதிபாளையம் 7, உடுமலை 8, பெரியகோட்டை 9, கணக்கம்பாளையம் 10. ராகல்பாவி 11, ரா.வேலூர் 12, வடபூதிநத்தம் 13, போடிபட்டி 14, கண்ணமநாயக்கனூர் 15, தளி 16, ஜல்லிபட்டி 17, லிங்கமாவூர் 18, வெங்கிட்டாபுரம் 19, சின்னகுமாரபாளையம் 20, குறிச்சிக்கோட்டை 21, பள்ளபாளையம் 22, போகிகவுண்டன்தாசர்பட்டி 23, குரல்குட்டை 24, ஆலாம்பாளையம் 25, குருவப்பநாயக்கனூர் 26, மானுப்பட்டி 27, தும்பலப்பட்டி 28, ஆண்டியகவுண்டனூர் 29, எலையமுத்தூர் 30, கல்லாபுரம் 31, சின்னபாப்பனூத்து 32, பெரியபாப்பனூத்து 33, உடுக்கம்பாளையம் 34, புங்கமுத்தூர் 35, செல்லப்பம்பாளையம் 36, தேவனூர் புதூர் 37, ராவணாபுரம் 38, வலையபாளையம் 39, எரிசனம்பட்டி 40, கொடுங்கியம் 41, தின்னப்பட்டி 42, பெரியவாளவாடி 43, சின்னவாளவாடி 44, சர்க்கார் புதூர் 45, ரெட்டிபாளையம் 46, ஜிலேபிநாயக்கன்பாளையம் 47, அரசூர் 48, கிருஷ்ணாபுரம் 49, தீபாலபட்டி 50, மொடக்குப்பட்டி 51 என புதிய எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
உடுமலையில் மண்டல அளவிலான கூடைப்பந்து போட்டி
உடுமலை பாலப்பம்பட்டி ருத்ரவேணி முத்துசாமி பாலிடெக்னிக் கல்லூரியில், கோவை மண்டல அளவில் கூடைப்பந்து போட்டி நடந்தது. இதில், கோவை மாவட்ட அளவில், பாலிடெக்னிக் கல்லூரிகளை சேர்ந்த 19 அணிகள் பங்கேற்றன. கல்லூரி செயலர் சின்னசாமி துவக்கி வைத்தார். கல்லூரியின் முதல்வர் மற்றும் ஐ.பி.ஏ.,ஏ., துணைத்தலைவருமான செல்வக்குமார் முன்னிலை வகித்தார்.அரையிறுதி போட்டியில், கோவை ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயா, மேட்டுப்பாளையம் நஞ்சையலிங்கம்மாள், உடுமலை ருத்ரவேணிமுத்துசாமி, கோவை பி.எஸ்.ஜி., பாலிடெக்னிக் கல்லூரி அணிகள் விளையாடின. இறுதிப் போட்டியில், ருத்ரவேணி முத்துசாமி பாலிடெக்னிக் கல்லூரியும், கோவை பி.எஸ்.ஜி., கல்லூரியின் அணிகளும் மோதின.
உடுமலை அருகே செங்குளம்.
பெதப்பம்பட்டி நால்ரோட்டில் ஆக்கிரமிப்பு அதிகரிப்பு: மாணவர்கள், பொதுமக்கள் பாதிப்பு
"விரைவில் உடுமலை கல்வி மாவட்டம்'
உடுமலை: கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் திருப்பூர் மாவட்டம் உருவாக்கப்பட்டபோது, உடுமலை தாலுகாவும் அதில் சேர்க்கப்பட்டது. புதிய மாவட்டத்திற்கு முதன்மை கல்வி அலுவலகம் அமைக்கப்பட்டு, கல்வி அலுவலர் நியமிக்கப்பட்டார். பொள்ளாச்சி கல்வி மாவட்டத்திலிருந்த உடுமலை பள்ளிகள் பிரிக்கப்பட்டு, திருப்பூர் மாவட்டத்தில் சேர்க்கப்பட்டன. பள்ளிகளின் எண்ணிக்கை அடிப்படையில் ஒரு வருவாய் மாவட்டத்தில், இரண்டு கல்வி மாவட்ட அலுவலகங்கள் செயல்படுவது வழக்கம். ஆனால், திருப்பூர் மாவட்டத்தில் தற்போது வரை ஒரே கல்வி மாவட்ட அலுவலகம் மட்டும் இயங்கி வருகிறது. பள்ளிக்கல்வித்துறை வரையறைகளின் படி குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பள்ளிகளை உள்ளடக்கி கல்வி மாவட்டம் அறிவிக்க வேண்டும் என ஆசிரியர்கள் உட்பட அனைத்து தரப்பிலும் கடந்த இரண்டு ஆண்டுகளாக கோரிக்கை விடப்பட்டு வருகிறது. ஆனால், பள்ளிக்கல்வித்துறை சார்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆசிரியர்கள் மாணவர்கள் என அனைத்து தரப்பினரும் திருப்பூருக்கு செல்ல வேண்டியிருந்ததால் அதிருப்தி நிலவியது. தாராபுரத்தை தலைமையிடமாக கொண்டு கல்வி மாவட்டம் அமைக்க கருத்துரு அனுப்பப்பட்டது. இதற்கு உடுமலை பகுதியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. கல்வி மாவட்டம் பிரிக்கப்படாததால் ஏற்படும் நிர்வாக சிக்கல்கள், கல்வித்தரம் பாதிக்கப்படுவது மற்றும் உடுமலையை தலைமையிடமாக கொண்டு புதிய கல்வி மாவட்டம் உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை குறித்து "தினமலரில்' நேற்று செய்தி வெளியானது. காரத்தொழுவில் நடந்த விழாவில் பங்கேற்ற பள்ளிக்கல்விதுறை அமைச்சர் தங்கம்தென்னரசு, "தினமலர்' செய்தி அடிப்படையில், விரைவில் கல்வி மாவட்டம் அமைக்கப்படும் என உறுதியளித்தார். இரண்டு ஆண்டுகளாக கிடப்பில் கிடக்கும் திட்டம் "தினமலர்' செய்தியால் அமைச்சர் கவனத்திற்கு சென்று விரைவில் தீர்வு கிடைக்க உள்ளதால் கல்வியாளர்கள் மற்றும் பள்ளி நிர்வாகிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
Download As PDF
உடுமலை கல்வி மாவட்டம் அமைக்க ஆசிரியர்கள், மாணவர்கள் எதிர்பார்ப்பு
உடுமலை: இரண்டு ஆண்டுகளாக கிடப்பில் கிடக்கும், உடுமலையை தலைமையிடமாக கொண்டு கல்வி மாவட்டம் அமைக்கும் திட்டத்தை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பாரா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி, உடுமலை, வால்பாறை, கிணத்துக்கடவு பகுதிகளை உள்ளடக்கி பொள்ளாச்சி கல்வி மாவட்டம் செயல்பட்டு வந்தது. இந்த கல்வி மாவட்டத்தில் உடுமலை பகுதியிலேயே பெரும்பாலான தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் அதிகளவில் செயல்பட்டு வந்தன.
உடுமலைபேட்டை போலீஸ் நிலையம்
Mother Village | Hamlets |
---|---|
1. UDUMAPET | 1. SS COLONY |
2. PERIYAKOTTAI | 1. PALLAIVALASU |
3. KANNAMANAICKANUR | 1. PALAPPAMPATTI |
4. KURALKUTTAI | 1. JOTHIPALAYAM |
5. BODIPATTI | 1. KARUPATTIPALAYAM |
6. R.VELUR | 1. MARULPATTI |
7. VADABOOTHANM | 1. MALAYADNIGOUNDANUR |
8. RAGALPAVI | 1. DV PATINAM |
9. POOLANKINAR | 1. SENNIMALAIPALAYAM |
10. GANAPATHIPALAYAM | 1. வேஞ்சம்டை |
உடுமலையில் காட்சி பொருளான போக்குவரத்து "சிக்னல்': விபத்துகள் அதிகரிப்பு
உடுமலை: உடுமலை நகர ரோடு சந்திப்புகளில் உள்ள போக்குவரத்து "சிக்னல்'கள் காட்சிப்பொருளாக மாறியுள்ளதால் காலை மற்றும் மாலை நேரங்களில் நெரிசலும்,விபத்துகளும் அதிகரித்துள்ளன. உடுமலை நகரத்தில் பஸ் ஸ்டாண்ட், தளி ரோடு சந்திப்பு, தாராபுரம் ரோடு டிவைடர் மற்றும் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இரண்டு பள்ளிகளின் அருகில் கடந்தாண்டு போக்குவரத்து சிக்னல் அமைக்கப்பட்டது. தன்னார்வ அமைப்பினர் மற்றும் போக்குவரத்து போலீசார் சார்பில் இந்த சிக்னல்கள் இயக்கப்பட்டு வந்தன. முக்கிய சந்திப்புகளில் சிக்னல்கள் இயங்கி வந்ததால் விபத்துகளும், நெரிசலும் குறைந்தது. இந்நிலையில், கடந்த சில மாதங்களாக சிக்னல் செயல்பாடு நிறுத்தப்பட்டு அவை காட்சிப்பொருளாக மாறின. இதனால், காலை மற்றும் மாலை நேரங்களில் பஸ் ஸ்டாண்ட் அருகில் போக்குவரத்தில் அதிக நெரிசல் ஏற்பட்டது. பழநி ரோட்டிலிருந்து வரும் பஸ்கள் பஸ் ஸ்டாண்ட்டில் நுழையும் முன் வாரச்சந்தை ரோட்டிலிருந்து வரும் வாகனங்கள் ரோட்டை கடந்து செல்ல முயன்றன. இதனால், அப்பகுதியில் குறுக்கும், நெடுக்குமாக வாகனங்கள் அணிவகுத்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தளி ரோடு சந்திப்பு பகுதியிலும் இதே பிரச்னை நிலவியது. பல ஆண்டுகால போராட்டத்திற்கு பிறகு உடுமலை நகரில் அமைக்கப்பட்ட சிக்னல்கள் காட்சி பொருளானதால் வாகன ஓட்டிகள் வேதனையடைந்தனர். இந்நிலையில், போக்குவரத்து போலீசாரும் போதிய அளவு இல்லாததால் நகரத்தில் வாகன பயணம் அபாயமானதாக மாறியது. சிக்னல்களை மீண்டும் இயக்கி நெரிசலை குறைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில்," நகரில் செயல்படாமல் உள்ள சிக்னல்கள் விரைவில் செயல்பாட்டிற்கு கொண்டு வரப்படும். போக்குவரத்து போலீசில் இருந்த காலியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது. தற்போது இரண்டு எஸ்.ஐ., மற்றும் நான்கு காவலர்கள் இந்த பிரிவிற்கு நியமிக்கப்பட்டுள்ளனர். முக்கிய ரோடு சந்திப்புகளிலும், பஸ் ஸ்டாண்ட் பகுதியிலும் போக்குவரத்து போலீசார் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சிக்னல் இயங்க துவங்கியதும் நெரிசலும், விபத்துகளும் கட்டுப்படுத்தப்படும்' என்றனர். Download As PDF
விதி மீறி வைக்கப்பட்ட "பிளக்ஸ்' பேனர் அகற்றம்
பிரசன்ன விநாயகர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
மேற்கு தொடர்ச்சி மலை அடிவார ஓடைகளில் மணல் கொள்ளை: பாழாகும் விளைநிலங்கள்
உடுமலை:மேற்கு தொடர்ச்சிமலை அடிவாரத்திலுள்ள நூற்றுக்கணக்கான ஓடைகளில் தேங்கும் மணல் தொடர்ந்து திருடப்படுவதால், நீர் வழித்தடங்கள் காணாமல் போய் வருகின்றன. நிலத்தடி நீர் மட்டம் பாதிக்கப்படுவதுடன் மழைக்காலங்களில் வெள்ளநீர் விளைநிலங்களுக்குள் புகுந்து பாதிப்பை ஏற்படுகிறது. மேற்குதொடர்ச்சிமலையில் உடுமலை வனசரகத்திற்குட்பட்ட திருமூர்த்திமலை பகுதியிலிருந்து ஜல்லிபட்டி கொங்குரார்குட்டை பகுதி வரை அடிவாரத்தில் நூற்றுக்கணக்கான ஓடைகள் உள்ளன. மழைக்காலங்களில் மலையிலிருந்து சமவெளிப்பகுதிக்கு வழிந்தோடும் தண்ணீர் இந்த ஓடைகளின் வழியாக செல்கிறது. பருவமழைக்காலங்களில் இந்த ஓடைகளில் அதிகளவு தண்ணீர் செல்வதால் பல அடி உயரத்திற்கு மணல் பரப்பு உருவானது. மழை இல்லாத காலங்களிலும் ஓடைகளிலுள்ள மணல் பரப்பால் சுற்றுப்பகுதியிலுள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்களுக்கு நிலத்தடி நீர் மட்டத்திற்கு உதவியாக இருந்தது. இந்நிலையில், ஓடைகளில் மணல் பரப்பு அதிகம் தேங்கியதும், மணல் கடத்தல்காரர்களின் பார்வை மேற்குதொடர்ச்சி மலை அடிவாரத்தின் பக்கம் திரும்பியது. ஜல்லிபட்டி கொங்குரார் குட்டை பகுதியிலுள்ள ஓடைகளில் கடந்த சில மாதங்களாக மணல் திருட்டு அதிகரித்துள்ளது. கன்னிமார் ஓடை உட்பட பெயரிடப்படாத பல சிறிய ஓடைகளிலிருந்து நாள்தோறும் நூற்றுக்கணக்கான லோடு மணல் மாட்டு வண்டிகளின் மூலம் கடத்தப்படுகிறது.
உடுமலையில் பருத்தி அறுவடை துவக்கம்: விலை குறைவால் விவசாயிகள் அதிர்ச்சி
உடுமலை பகுதியில் பி.ஏ.பி., பாசனத்திற்கு பரவலாக பருத்தி பயிரிடப்பட்டுள்ளது. மிக நீண்ட இழை பருத்தி ரகங்கள் பயிரிடப்பட்டு, தற்போது அறுவடை பணிகள் துவங்கியுள்ளன. தொடர்மழையால் செடிகளில் நோய்த்தாக்குதல் மற்றும் காய் சப்பை உதிர்வது ஆகிய காரணங்களால் விளைச்சல் பாதியாக குறைந்துள்ளது.
அறுவடை பணிகள் துவங்கியுள்ள நிலையில், பருத்தி சந்தையில் அனைத்து ரக பருத்தியின் விலையும் சற்று குறைந்துள்ளது விவசாயிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது, மிக நீண்ட இழை பருத்தி ரகம் கிலோ 42 ரூபாயிலிருந்து 45 ரூபாய் வரை கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.
தற்போது ஏக்கருக்கு 10 குவிண்டால் கூட விளைச்சல் கிடைக்காத நிலை உள்ளது. தொழிலாளர் பற்றாக்குறை, நோய்த்தாக்குதலால் சாகுபடி செலவு பல மடங்கு அதிகரித்துள்ள நிலையில், நிலையான விலை கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அறுவடை பணிகள் துவங்கியுள்ள போதிலும் கிராமங்களில் பருத்தி கொள்முதல் துவங்கவில்லை. செடிகளில் காய்கள் வெடித்துள்ள போதிலும் தற்போது நிலவும் பனிப்பொழிவு மற்றும் லேசான மழை காரணமாக பருத்தியில் ஈரப்பதம் காணப்படுகிறது. இதனால், பருத்தியின் தரம் பாதிக்கப்பட்டு விலை மேலும் குறையும். இரண்டாம் கட்டமாக மேற்கொள்ளப்படும் அறுவடையில் மட்டுமே தரமான பருத்தி கிடைக்கும் நிலை உருவாகியுள்ளது. இவ்வாறு, இந்த சீசனில் பருத்தி பயிரிட்ட விவசாயிகள் பல்வேறு சோதனைகளில் சிக்கி தவிக்கின்றனர்.
அமராவதி புதிய ஆயக்கட்டு பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு
உடுமலை,பொள்ளாச்சியில் வைகுண்ட ஏகாதசி விழா
உடுமலை அருகே பெரியபட்டி ஸ்ரீதேவி, பூதேவி சீனிவாச அனுமந்தராய சுவாமி கோவிலில், வைகுண்ட ஏகாதசி பெருவிழாவையொட்டி, சித்தி விநாயகர் கோவிலில், பெருமாளுக்கு அபிஷேக பூஜை, அலங்காரம், நைவேத்யம், தீபாராதனை உள்ளிட்ட சிறப்பு பூஜைகளும், இரவு 9.00 மணிக்கு பெருமாள் திருவீதி உலா செல்லும் நிகழ்ச்சி நடக்கிறது.
உடுமலை சீனிவாச ஆஞ்சநேய பெருமாள் கோவில், பிரசன்ன விநாயகர் கோவிலிலுள்ள சவுரிராஜப்பெருமாள் சன்னதி, கொழுமம் கல்யாண வரதராஜப்பெருமாள் கோவில், கொமரலிங்கம் ஆத்தோரம் வெங்கட்ரமணசுவாமி கோவில், ஏரிப்பாளையம் வரதராஜப்பெருமாள் கோவில், கோட்டமங்கலம் வரதராஜப்பெருமாள் கோவில் மற்றும் சுற்றுப்பகுதியிலுள்ள கோவில்களில் வைகுண்ட ஏகாதசியையொட்டி, அபிஷேகம், தீபாராதனை, சொர்க்கவாசல் திறப்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
பொள்ளாச்சி கரிவரதராஜ பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி இன்று, நாளை (17ம் தேதி) மற்றும் வரும் 18ம் தேதி ஆகிய மூன்று நாட்களுக்கு மூலஸ்தானத்திலுள்ள மூலவருக்கு முத்தங்கி சேவை நடக்கிறது. நாளை காலை 5.30 மணிக்கு சொர்க்க வாசல் திறக்கப்படும். இதில், காய், கனி, திரவிய பொருட்கள் கட்ட விரும்பும் பக்தர்கள், இன்று காலை 10.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை கோவிலில் பொருட்களை வழங்கலாம்.
விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் பெரிய மருதுபாண்டியன் மற்றும் அறங்காவலர் குழுவினர் செய்து வருகின்றனர். அதேபோல், பொள்ளாச்சி - பாலக்காடு ரோட்டிலுள்ள லட்சுமி நரசிம்மர் கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி நாளை அதிகாலை 4.30 மணிக்கு வாசுதேவ புண்ணியாவாசனமும் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடக்கிறது. அதன்பின், மகா அபிஷேகம் நடக்கிறது.
காரில் கடத்த முயன்ற ரூ.1.52 லட்சம் சந்தனக்கட்டை பறிமுதல்
ஆனைமலை புலிகள் காப்பகம் உடுமலை வனச்சரகத்திற்குட்பட்ட குழிப்பட்டி, குருமலை, நாரைக்கல் சரகம் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான சந்தன மரங்கள் உள்ளன. இவற்றை வெட்டி கடத்தும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. நேற்று முன்தினம் இரவு குழிப்பட்டி பகுதியிலிருந்து சந்தன மரங்கள் வெட்டி, திருமூர்த்தி மலை பகுதியிலிருந்து கடத்தப்பட உள்ளதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து, வனச்சரகர் சரவணன் மற்றும் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். இரவு 11.30 மணிக்கு மாருதி 800 கார் திருமூர்த்திமலை பகுதியிலிருந்து வேகமாக வந்தது.
இதனை நிறுத்த வனத்துறையினர் சோதனை செய்ய முயன்ற போது, கார் நிற்காமல் சென்றது. இதனையடுத்து, காரை வனத்துரையினர் ஜீப்பில் துரத்தினர். ஒரு கிலோ மீட்டர் தூரம் துரத்திய நிலையில், காண்டூர் கால்வாய் அருகே இருட்டில் காரை நிறுத்திவிட்டு, காரில் வந்தவர்கள் தப்பி ஓடினர். டி.என் 38 சி 9641 எண்ணுள்ளஅந்த காரை வனத்துறையினர் சோதனை செய்த போது, மூன்று சாக்கு பைகளில் சந்தன கட்டைகள் இருந்தன. கார் மற்றும் சந்தன கட்டைகளை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.
மூன்று சாக்குபைகளில் தரமான 38 கிலோ சந்தன கட்டைகள் இருந்தன. இதன் மதிப்பு 1.52 லட்சம் ரூபாய். இது குறித்து வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய குற்றவாளிகளை வனத்துறையினர் தேடிவருகின்றனர்.
திருப்பூர் மாவட்டம் உதயமாகி ஓராண்டு நிறைவு
திருப்பூர் மாவட்டம் உதயமாகி ஓராண்டு நிறைவு
ரூ.1.50 கோடி மதிப்பிலான நவீன எரிவாயு மயானம் 21ம் தேதி திறப்பு
உடுமலைப்பேட்டை
Pollachi to Udumalpet 20km distance. The name in the ancient days was "UDUMALAI" and due to its rural atmosphere, it was also named as Pettai. In latter period it was changed as "UDUMALAIPETTAI" in Tamil.
The city was previously under Coimbatore district but was moved under the newly formed Tirupur district in October 2008. The change was opposed by many of the residents but it was not reverted back. In short known as Udumalai, the city is surrounded by the high mountains of Western Ghats on three sides. This Municipal town has a population of about 60,000. Udumalpet is an industrial town with number of textile, paper and farming related industries established here. Famous landmark and monuments in an around the town includes Thirumoorthy Hills,which has the Thirumurthi water reservoir that provides water supply to the town, Mariamman Temple, an old worshiping place in the town center and Amaravathi Reservoir, across Amaravathi River which provides irrigation to the agricultural lands around the town. Both Thirumoorthy Hills and Amaravathi Reservoir provide recreational activities such as boating, fishing and hiking and attract tourists from other parts of the state. Udumalpet lies between the famous temple town of Palani (35 km)and Pollachi (28 km)on the National Highway No.209. Udumalpet is also connected by a metre gauge railway line. Udumalpet assembly constituency is part of Pollachi.
சட்டமேலவை தொகுதி வாக்காளர் பட்டியல் புதிதாக பெயர் சேர்க்க 1,579 பேர் விண்ணப்பம்
உடுமலையில் புதிய குடிநீர் நிறுவனம் துவக்கம்
திருப்பூர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் மாற்றம்
Download As PDF
அதிமுக மாவட்ட செயலாளருக்கு உற்சாக வரவேற்பு
கல்லாபுரம்-அமராவதி அணை ரோடு பழுது பொதுமக்கள் அவதி
உடுமலை: குண்டும், குழியுமாக உள்ள கல்லாபுரம்- அமராவதி அணை ரோட்டை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள் கூறியதாவது: உடுமலை கல்லாபுரத்திலிருந்து அமராவதி அணை மற்றும் அமராவதி நகர் பகுதிக்கு பல்வேறு தேவைகளுக்காக இவ்வழித்தடத்திலேயே சென்று வருகிறோம். இந்நிலையில், ரோட்டை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படாததால், குண்டும், குழியுமாக உருமாறியுள்ளது. தற்போது பெய்த மழையினால் மேலும் ரோடு சேதமாகியுள்ளது. இதனால், ரோட்டில் செல்லும் வாகனங்கள் விபத்துக்குள்ளாகி வருகின்றன. ரோட்டை சீரமைக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். Download As PDF
உடுமலைக்கு முதல்கட்டமாக வந்த 34 ஆயிரம் இலவச வேஷ்டி சேலை
உடுமலை-சின்னார் ரோடு மேம்பாடு பணி: வனத்துறை அனுமதி அளிக்க கோரிக்கை
உடுமலை: வனத்துறை அனுமதி கிடைக்காததால், உடுமலை-சின்னார் ரோட்டில் மேம்பாட்டு பணிகள் பல ஆண்டுகளாக தடைபட்டு ஒதுக்கப்படும் நிதி பிற பணிகளுக்கு பயன்படுத்தப்படும் நிலை உள்ளது. உயிரிழப்புகளை குறைக்க மேம்பாட்டு பணிகளுக்கு வனத்துறை அனுமதி அளிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. உடுமலையிலிருந்து கேரளா மாநிலம் மூணாறுக்கு செல்லும் ரோடு இரு மாநிலங்களை இணைக்கும் முக்கிய ரோடாக உள்ளது. இந்த ரோட்டில் உடுமலையிலிருந்து சின்னார் வரையுள்ள 28 கி.மீ., பகுதி நெடுஞ்சாலைத்துறை உடுமலை உட்கோட்ட கட்டுப்பாட்டில் உள் ளது. ஒன்பதாறு செக்போஸ்ட்டிலிருந்து சின்னார் செக்போஸ்ட் வரை 20க்கும் அதிகமான கி.மீ., ரோடு வனத்துறை கட்டுப்பாட்டு பகுதி வழியாக செல்கிறது. இந்த ரோட்டில் சுற்றுலா பயணிகள் மற்றும் அம்மாநிலத்திற்கு காய்கறிகள் உட்பட பொருட்களை கொண்டு செல்லும் சரக்கு வாகனங்கள் அதிகளவு செல்கின்றன.வனத்துறை கட்டுப்பாட்டு பகுதியில் பல இடங்களில் ரோடு படுமோசமான நிலையில் உள்ளது. குறுகிய பாலங்களும், ரோட்டோர பள்ளங்களும் வாகன ஓட்டிகளுக்கு அச்சத்தையும், விபத்தையும் ஏற்படுத்தி வருகின்றன. குறிப்பாக 19/2 கி.மீட்டரிலுள்ள "எஸ்' வளைவு பகுதியில் வாகனங்கள் எளிதில் திரும்ப முடியாமல் திணறும் நிலை உள்ளது.இப்பகுதியில் சரக்கு வாகனங்கள் விபத்திற்குள்ளாவதும், இருமாநிலங்களுக்கும் இடையில் போக்குவரத்து பாதிக்கப்படுவதும் தொடர்கதையாகி வந்தது. இந்நிலையில், வளைவு பகுதியை மேம்படுத்தி விபத்துகளை குறைக்க நெடுஞ்சாலைத்துறை சார்பில் நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால், பணிகளை மேற்கொள்ள வனத்துறை ஒப்புதல் அளிக்கவில்லை.இதனால், மாற்று ஏற்பாடாக வளைவு பகுதியில் தடுப்பு சுவருக்கு பதிலாக பேரிகார்டு போன்ற நீண்ட தகடுகளை நெடுஞ்சாலைத்துறையினர் அமைத்தனர். பிற இடங்களில் காணப்படும் குறுகிய பாலங்கள், பள்ளங்களின் அருகில் தடுப்பு சுவர்கள், தொடர் பராமரிப்புபணிகள், குண்டும், குழியுமான இடங்களில் சிறப்பு மேம்பாடு ஆகிய திட்டங்களை செயல்படுத்த நெடுஞ்சாலைத்துறையினர் திட்ட மதிப்பீடு தயாரித்து அரசு ஒப்புதலுக்கு அனுப்பினர். ரோட்டின் முக்கியத்துவம் கருதி அரசும் 70 லட்ச ரூபாய் வரை சின்னார் ரோடு மேம்பாட்டிற்காக ஒதுக்கியது. ஆனால், குறுகிய பாலங்களை விரிவுபடுத்தவும், தடுப்பு சுவர் அமைக்கவும் வனத்துறை அனுமதி நெடுஞ்சாலைத்துறையினருக்கு கிடைக்கவில்லை. வளைவு பகுதியை மேம்படுத்தவும் இதே நிலை தொடர்கிறது. தற்போது, பழுதடைந்துள்ள இரண்டு தடுப்பு சுவர்களை பராமரிக்க மட்டும் அனுமதி கிடைத்துள்ளதால் அப்பணிகளை நெடுஞ்சாலைத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். ரோடு மேம்பாட்டிற்கு ஒதுக்கப்பட்ட நிதி வேறு பணிகளுக்கு ஆண்டுதோறும் பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது.
வனவிலங்குகள் பாதுகாப்பிற்காக வனச்சட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. இதனால், வன கட்டுப்பாட்டு பகுதியிலுள்ள ரோட்டை மேம்படுத்த அனுமதி கிடைப்பதில்லை. வன உயிரினங்களை காப்பதை போல் இந்த ரோட்டில் மனித உயிரிழப்புகளையும் தடுக்க மேம்பாட்டு பணிகளுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
Download As PDF
உடுமலையில் மூன்று நாளாக குடிநீர் நிறுத்தம்: பொதுமக்கள் அதிருப்தி
சைனிக் பள்ளி முதல்வர் ராஜஸ்தானுக்கு மாற்றம்
உடுமலை: உடுமலை அமராவதி நகர் சைனிக் பள்ளி முதல்வர் பதவி உயர்வு பெற்று ராஜஸ்தானிற்கு மாறுதல் பெற்று சென்றார். உடுமலை அமராவதி நகர் சைனிக் பள்ளி முதல்வராக பணியாற்றிய கர்னல் சாமுவேல் பதவி உயர்வு பெற்று, ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரிலுள்ள ராணுவத்தின் தலைமையகம் 12வது பிரிவு மாறுதல் பெற்றுச் சென்றார். இப்பள்ளியில் மூன்றாண்டுகளாக பணியாற்றினார். பதவி உயர்வு பெற்று மாறுதல் பெற்று சென்றதையடுத்து, தற்போது பள்ளியின் தலைமையாசிரியர் விங்கமாண்டர் ரவிக்குமார் கூடுதலாக பள்ளி முதல்வர் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டுள்ளார். Download As PDF
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனைகள்
Sl No | Name Of the STAR Hospitals | STD Code | Telephone | Cell Phone |
1 | D.S.K. Hospital, Tiruppur | 0421 | 2421350 2422505 | 99528 21812 99440 88233 |
2 | Lotus Eye Care Hospital, Tiruppur | 0421 | 2346060 4346161 | 99449 72824 |
3 | Revathi Medical Centre, Tiruppur | 0421 | 4332211 4332200 | 98422 47997 |
4 | Sir Kumaran Hospital, Tiruppur | 0421 | 4330000 2478787 | 98422 01500 |
5 | The Eye foundation, Tiruppur | 0421 | 2232333 2232334 | 94433 17791 |
6 | Balaji Surya Hospital, Dharapuram | 04258 | 220385 220585 | 98422 20385 |
7 | Muthusamy Nursing Home, Udumalpet | 04252 | 224327 | 94425 23448 |
8 | Priya Orthopaedic Centre, Udumalpet | 04252 | 224726 225092 | 98431 29464 |
Sl No | Name Of the Hospital | Contact No (0421) |
1 | A.G. Hospital | 2702666 |
2 | Balakumar Nursing Home | 2721020 |
3 | Chandar Nursing Home | 2475022 |
4 | D.S.K. Hospital | 2421350 |
5 | E.S.I. Hospital | 2720200 |
6 | Eswaran Poly clinic | 2740560 |
7 | Ganapathy Nursing Home | 2422246 |
8 | Kannan Nursing Home | 2476888 |
9 | Kiruthika Hospital | 2746466 |
10 | Dr. Kitchappan Hospital | 2742466 |
11 | N.S.K. Hospital | 2713700 |
12 | Priya Poly Clinic | 2742466 |
13 | Revathi Medical Centre | 4332200,4332211 |
14 | Roopa Nursing Home | 2721405 |
15 | S.R. Nursing Home | 2720456 |
16 | Sakthi Hospital | 2702155 |
17 | Sankara Hospital | 2740471 |
18 | Seetha Lakshmi Nursing | 2476255 |
19 | Sri Kumar Nursing Home | 2745656 |
20 | Sundaram Nursing Home | 2422998 |
21 | Tamilnadu Hospitals | 2705042 |
22 | Tiruppur Government Hospital | 2421201 |
23 | Tiruppur Medical Foundation | 2702766 |
24 | Uma Clinic | 2712501 |
Blood Banks | ||
1 | Government Hospital | 2421201 |
2 | Eswaran Poly Clinic | 2740560 |
3 | Free Ambulance | 2748900 |