உடுமலை: உடுமலை மாரியம்மன் கோவிலில், ஆண்டு விழாவையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தது. உடுமலை மாரியம்மன் கோவிலில், கடந்த 2008ம் ஆண்டு பிப்.,1ம் தேதி கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேகம் நடந்து மூன்று ஆண்டுகள் நிறைவடைந்ததையடுத்து, நேற்றுமுன்தினம் ஆண்டு விழா நடந்தது. விழாவையொட்டி, அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, புண்யாகவாசனம், பஞ்சகவ்ய பூஜைகளும், சித்தி விநாயகர், செல்வமுத்துக்குமரன், மாரியம்மன், அஷ்டதிக் நாகராஜாக்கள், கலச ஆவாஹன பூர்வாங்க பூஜைகள், கடம்புறப்பாடு உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடந்தது. பின், ஸ்நபன அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது.

Twitter
Facebook
Flickr
RSS





0 comments: (+add yours?)
Post a Comment