உடுமலை: அமராவதி ஆற்றில் மணல் திருட்டு அதிகரித்துள்ளதால், விளைநிலங்கள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. வருவாய்த்துறையினர் நடவடிக்கை எடுக்காததால் விவசாயிகள் அதிருப்தியடைந்துள்ளனர். உடுமலை அருகேயுள்ள அமராவதி அணையிலிருந்து ஆற்றில் திறந்து விடப்படும் தண்ணீர் மூலம் திருப்பூர், கரூர் மாவட்டத்திற்குட்பட்ட 25 ஆயிரத்திற்கும் அதிகமான ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. ஆற்றின் கரையோரத்தில் பல்வேறு கிராமங்களுக்கான கூட்டுக்குடிநீர் திட்டங்களும் செயல்பட்டு வருகின்றன.அமராவதி ஆற்றில் தொடர்ந்து நடக்கும் மணல் திருட்டால், ஆற்றின் இயல்பான பாதை மாறுவதுடன், பல ஆயிரம் ஏக்கருக்கான நிலத்தடி நீர் மட்டமும் பாதிப்பிற்குள்ளாகி வருகிறது. வடகிழக்கு பருவமழை அதிகளவு பெய்ததால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.தொடர்ந்து, ஆற்றில் அதிகளவு தண்ணீர் செல்வதால் மணல் திருட்டு கடந்த ஒரு மாதம் தடைபட்டிருந்தது. இந்நிலையில், கரூர் போன்ற பகுதிகளிலிருந்து மணல் வரத்து குறைந்ததால் கட்டுமான பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.மணல் விலை பல மடங்கு உயர்ந்துள்ளதையடுத்து அமராவதி ஆற்றில் மீண்டும் மணல் திருட்டு அதிகரித்துள்ளது. ஆற்றில் தண்ணீர் சென்றாலும் நூதன முறைகளை பயன்படுத்தி மணல் திருடப்படுகிறது. அணையிலிருந்து சில கி.மீ., தொலைவில் அமைந்துள்ள கல்லாபுரம் பகுதியில் திருட்டு சமீபகாலமாக அதிகரித்துள்ளது.திருட்டிற்காக பிரத்யேகமாக மிதவைகளை அமைத்துள்ளனர். கரையோரத்தில், மணலை அள்ளி குவித்து வைத்து சிறிய சாக்குபைகளில் அவற்றை கட்டி வைக்கின்றனர். ரோட்டிற்கு கொண்டு வர வழியில்லாததால் மிதவைகளில் மூட்டைகளை போட்டு மறுகரைக்கு எடுத்து வருகின்றனர். பின்னர் சைக்கிள் மற்றும் பைக் ஆகிய வாகனங்களில் மூட்டைகளை எடுத்து சென்று விற்பனை செய்கின்றனர்.இவ்வகை திருட்டால் ஆற்றின் கரையோரத்தில் பெரிய பள்ளங்கள் ஏற்பட்டு குளிக்க செல்பவர்களும், இதர தேவைக்காக அப்பகுதிக்கு செல்பவர்களும் தண்ணீர் மூழ்கி இறக்கும் அபாயம் உள்ளது. கரையோரத்திலுள்ள விவசாய நிலங்களிலும் தண்ணீர் புகுந்து சேதம் ஏற்படும் நிலையுள்ளது.மணல் திருட்டு மற்றும் அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பொதுமக்கள் சார்பில் வருவாய்துறையினருக்கு பல முறை புகார் மனு அனுப்பியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், கிராம மக்களும், விவசாயிகளும் அதிருப்தியடைந்துள்ளனர். கல்லாபுரம் பகுதியில் மணல் திருட்டை தடுக்க வருவாய்துறை அதிகாரிகள் தொடர் சோதனை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
EARN MONEY WITHOUT INVESTMENT
அமராவதி ஆற்றில் மணல் திருட்டு: விவசாயிகள் அதிருப்தி
Download As PDFPrint this post
Subscribe to:
Post Comments (Atom)
0 comments: (+add yours?)
Post a Comment