make gif

அமராவதி அணை நிரம்பியது வெள்ள அபாய எச்சரிக்கை

உடுமலை: தொடர் மழையால் அமராவதி அணை நேற்று நிரம்பியது. இதனால், திருப்பூர், கரூர் மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அமராவதி ஆற்றின் கரையோரத்தில் உள்ள கிராமங்களுக்கு வெள்ள எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது.  உடுமலை அருகேயுள்ள அமராவதி அணை மொத்த கொள்ளளவு 90 அடி இதில், நவ., 1 ல் 48.95 அடியாக இருந்த அணையின் நீர் மட்டம் தொடர் மழை காரணமாக கடந்த பத்து நாட்களாக வேகமாக உயர்ந்தது. கடந்த 18 ம் தேதி முதல் அணையின் நீர் வரத்து விநாடிக்கு ஆயிரம் கன அடியை தாண்டியது. கடந்த 21 ம் தேதி அணை பகுதியில் 130 மி.மீ., மழை பதிவான நிலையில் நீர் வரத்து ஆறுகளான பாம்பாறு, தேனாறு, சின்னாறு ஆகிய ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. நீர் வரத்து 11 ஆயிரம் கன அடியாக அதிகரித்து, ஒரே நாளில் நான்கு அடி நீர் மட்டம் உயர்ந்தது. பாசனப்பகுதிகளிலும் மழைப்பொழிவு இருந்ததால் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்படவில்லை. அணை மற்றும் நீர் பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக நீர்மட்டம் வேகமாக உயர்ந்தது. 24 ம் தேதி ஒரே நாளில் நீர் மட்டம் ஐந்து அடி உயர்ந்தது.  நேற்று காலை அணைக்கு 3,618 கன அடி நீர் வரத்து இருந்தது. அணை பகுதியில் 16 மி.மீ., மழை அளவு பதிவானது. அணையின் நீர் மட்டம் 87 அடியாக உயர்ந்தது. அமராவதி அணை கடந்தாண்டு நவ., 16 ம் தேதி நிரம்பியது. ஒராண்டுக்கு பிறகு அணை நேற்று நிரம்பிய நிலையில் வழியோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. Download As PDFPrint this post

0 comments: (+add yours?)

Post a Comment

பார்த்தவர்கள்

பார்த்தவர்கள்

free counters free counters
Related Posts Plugin for WordPress, Blogger...
Photobucket