|
| அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் | | |
|
|
|
|
|
|
| மூலவர் | : | மாரியம்மன் |
| உற்சவர் | : | - |
| அம்மன்/தாயார் | : | - |
| தல விருட்சம் | : | - |
| தீர்த்தம் | : | கிணற்றுநீர் |
| ஆகமம்/பூஜை | : | சைவாகமம் |
| பழமை | : | 500 வருடங்களுக்கு முன் |
| புராண பெயர் | : | உடும்புமலை, கரகிரி |
| ஊர் | : | உடுமலைப்பேட்டை |
| மாவட்டம் | : | கோயம்புத்தூர் |
| மாநிலம் | : | தமிழ்நாடு | |
| | 
| பாடியவர்கள்: | 
|
|
|
|
| - |
|
|
|
| 
| திருவிழா: | 
|
|
|
|
| திருவிழா: பங்குனி - சித்திரையில் 19 நாள் பிரதானம், தீபாவளி, நவராத்திரி, திருக்கார்த்திகை, ஆடிவெள்ளி மற்றும் பவுர்ணமி. |
|
|
|
| 
| தல சிறப்பு: | 
|
|
|
|
| மாரியம்மன் சுயம்பு மூர்த்தியாக அருள்கிறார். |
|
|
|
| 
| திறக்கும் நேரம்: | 
| |
|
|
|
| காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும். |
|
|
|
| 
| முகவரி: | 
|
|
|
|
| அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், உடுமலைப்பேட்டை, கோயம்புத்தூர் மாவட்டம். |
|
|
|
| 
| போன்: | 
|
|
|
|
| +91-4252- 224 755 |
|
|
|
| 
| பொது தகவல்: | 
| |
| பிரகாரத்தில் செல்வகணபதி, செல்வமுத்துக்குமரன், தலவிருட்சத்தின் அடியில் அஷ்டநாக தெய்வங்கள் உள்ளன. பெயர்க்காரணம்: அரைச்சக்கரவடிவில் ஊரைக்காக்கும் அரணாக மலை அமைந்திருந்ததால் "சக்கரபுரி' என்றும், அம்மலையில் உடும்புகள் நிறைந்து காணப்பட்டதால் "உடும்புமலை' என்றும் அழைக்கப்பட்ட இவ்வூர் காலப்போக்கில் உடுமலைப்பேட்டை என்று அழைக்கப்படுகிறது. கோயில் மூன்று நிலை ராஜ கோபுரத்துடன் அமைந்துள்ளது. தல விநாயகரின் திருநாமம் சக்தி விநாயகர். |
| | 
| பிரார்த்தனை | 
|
|
|
|
| கண்நோய், அம்மை நோய் தீர, திருமணத்தடை, புத்திரதோஷம், நாகதோஷம் நீங்க வேண்டலாம். |
|
|
|
| 
| நேர்த்திக்கடன்: | 
|
|
|
|
| நேர்த்திக்கடன்: அம்பாளுக்கு அவல், தேங்காய் பூ, சர்க்கரைப்பொங்கல் நைவேத்யம் படைத்து பால்குடம், அக்னிசட்டி எடுத்தல், அங்கபிரதட்சணம், அன்னதானம் செய்தல், முடிகாணிக்கை செலுத்துதல். |
|
|
|
| 
| தலபெருமை: | 
| |
| இத்தல மாரியம்மன் பக்தர்களின் மனக்குறைகளை தீர்க்கும் அம்பாளாக அருள்பாலிக்கிறார். மாங்கல்ய மாரியம்மன்: இக்கோயிலில், வருடந்தோறும் மார்கழி திருவாதிரையில், 108 தம்பதியர்களை வைத்து "மாங்கல்ய பூஜை' நடத்தப்படுகிறது. இப்பூஜையில், அம்மனுக்கு மாங்கல்யம் சாத்தி விசேஷ ஹோமங்கள், பூஜைகள் நடத்தி, பெண்களுக்கு தாலிக்கயிறு வழங்கப்படுகிறது. பூஜை செய்த தாலியை பெண்கள் அணிந்து கொள்வதால், அவர்கள் வாழ்வில் பிரச்னைகள் இன்றி, சிறந்து விளங்குவர் என்பது நம்பிக்கை. |
| | 
| தல வரலாறு: | 
| |
| பல்லாண்டுகளுக்கு முன்பு, பக்தர் ஒருவர் தாம் எங்கே செல்கிறோம் என்ற நினைவே இல்லாமல், தானாகவே வனப்பகுதிக்குள் சென்றார். நீண்ட தூரம் சென்ற அவர் ஓரிடத்தில் நினைவு திரும்பி நின்றபோது, அங்கே சுயம்பு வடிவில் அம்பாள்இருந்ததைக் கண்டார். ஊருக்கு திரும்பிய அவர் வனத்தில் அம்பாளைக் கண்டதை மக்களிடம் கூறினார். அதன்பின், மக்கள் ஒன்று கூடி அம்பாள் இருந்ததை வனத்தைச் சீரமைத்து கோயில் எழுப்பினர். | | |
அருள்மிகு பிரசன்ன விநாயகர் திருக்கோயில் |
|
|
|
|
|
|
|
|
| மூலவர் | : | பிரசன்ன விநாயகர் (மேட்டு விநாயகர்) |
| உற்சவர் | : | விநாயகர் |
| அம்மன்/தாயார் | : | - |
| தல விருட்சம் | : | வன்னி , வில்வம், அரசு |
| தீர்த்தம் | : | கிணற்றுநீர் |
| ஆகமம்/பூஜை | : | - |
| பழமை | : | 500 வருடங்களுக்கு முன் |
| புராண பெயர் | : | - |
| ஊர் | : | உடுமலைப்பேட்டை |
| மாவட்டம் | : | கோயம்புத்தூர் |
| மாநிலம் | : | தமிழ்நாடு | |
|
|
 | பாடியவர்கள்: |  |
|
|
|
| - |
|
|
|
|  | திருவிழா: |  |
|
|
|
| சித்ராபவுர்ணமி, வைகாசி விசாகம், ஏகாதசி, ஆடிப்பெருக்கு, அனுமன் ஜெயந்தி, திருக்கார்த்திகை, தை, ஆடி வெள்ளி, விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி, தைப்பூசம், மகாசிவராத்திரி, மாசிமகம், பங்குனி உத்திரம். |
|
|
|
|  | தல சிறப்பு: |  |
|
|
|
| இங்கு விநாயகர் பக்தனிடம் காணிக்கை தரும்படி வேண்டி கோயில் கொண்டுள்ளார். திப்புசுல்தானால் வணங்கப்பட்ட ஆதிவிநாயகர், காசிவிஸ்வநாதருக்கு பின்புறம் அரசமரத்தின் கீழ் வைக்கப்பட்டுள்ளார். இத்தலம் சிறந்த சைவ வைணவ இணைப்பு பாலமாகவும், மும்மூர்த்திகள் அமைந்த தலமாகவும் திகழ்கிறது. |
|
|
|
|  | திறக்கும் நேரம்: |  |
|
|
|
|
| காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும். |
|
|
|
|  | முகவரி: |  |
|
|
|
| அருள்மிகு பிரசன்ன விநாயகர் திருக்கோயில் உடுமலைப்பேட்டை- 642126 கோயம்புத்தூர் மாவட்டம் |
|
|
|
|  | போன்: |  |
|
|
|
| +91 - 4252 221 048 |
|
|
|
|  | பொது தகவல்: |  |
|
| இங்கு விநாயகர் ராஜகம்பீர கோலத்துடன், ஏகதளவிமானத்தின் கீழ் அருள்பாலிக்கிறார். இங்கு நைவேத்யமாக சர்க்கரைப்பொங்கல் படைத்து வழிபடுகின்றனர். அரைச் சக்கர வடிவில் ஊரைக்காக்கும் அரணாக மலை அமைந்திருந்ததால் "சக்கரபுரி' என்றும், அம்மலையில் உடும்புகள் நிறைந்து காணப்பட்டதால் "உடும்புமலை' என்றும் அழைக்கப்பட்ட இவ்வூர், காலப்போக்கில் உடுமலைப்பேட்டை என்றழைக்கப்பட்டது. |
|
|
|
| ராஜகம்பீர கோலம் : இத்தல விநாயகர் ஆறடி உயரத்தில் ராஜகம்பீர கோலத்தில் அமர்ந்துள்ளார். மூஷிக வாகனம் பெரிய வடிவத்தில் இருப்பதும், முன் மண்டபத்தின் மேற்கூறையில் 12 ராசிகளைக் குறிக்கும்படியான சிற்பம் பொறிக்கப்பட்டிருப்பதும் சிற்பக்கலையின் சிறப்பை உணர்த்துகிறது. தேவ விருட்சங்களான வன்னி, வில்வம்,அரசு ஆகியன இங்குள்ளன. திப்புசுல்தானால் வணங்கப்பட்ட ஆதிவிநாயகர், காசிவிஸ்வநாதருக்கு பின்புறம் அரசமரத்தின் கீழ் வைக்கப்பட்டுள்ளார். கோயில் ராஜகோபுரத்திற்கு நேரே காசிவிஸ்வநாதர், மூலவர் இடத்தில் காட்சி தருகிறார். அவருக்கு இடப்புறம் காசி விசாலாட்சி, அருகில் தம்பதி சமேதராக முருகன், முகப்பில் வன்னி மரத்தின் அடியில் பிரம்மன், வடமேற்கில் கண்ணபுரநாயகி உடனாய சுவுரிராஜபெருமாள், அவருக்கு இடப்புறம் ஆஞ்சநேயர் ஆகியோர் தனியே சன்னதி கொண்டுள்ளனர். இவ்வாறு, இத்தலம் சிறந்த சைவ வைணவ இணைப்பு பாலமாகவும், மும்மூர்த்திகள் அமைந்த தலமாகவும் திகழ்கிறது. மாதக்கிருத்திகை தினத்தில் வெள்ளித்தேரில் விநாயகர் ஊர்வலமாக வருவது இக்கோயிலின் சிறப்பு |
|
|
 | தல வரலாறு: |  | |
| முன்னொரு காலத்தில் வனமாக இருந்த இப்பகுதியை திப்புசுல்தான் ஆட்சி செய்தார். இயற்கையாகவே பெரிய குளம் ஒன்றுடன், அரைவட்ட மலையினால் சுற்றியபடி இப்பகுதி பாதுகாப்புடன் அமைந்திருந்தது. இதனால், எதிரிகள் யாரும் எளிதில் நெருங்க முடியாததால், திப்புசுல்தான் தனி ராஜ்யம் கொண்டு ஆட்சி செய்து வந்தார். ஒர் நாள், அவரது கனவில் விநாயகர் தோன்றி, "உன் நாட்டைக் காக்கும் எனக்கு காணிக்கை கூட செலுத்தாமல் இருக்கிறாயே! என்றாராம். அதைக்கேட்ட திப்புசுல்தான், காணிக்கை கேட்ட விநாயகருக்காக, அவரையே காணிக்கையாக வைத்து, ஊரின் மேற்கு பகுதியில் குளக்கரையில் கோயில் அமைத்தார். பிற்காலத்தில், ஆட்சி செய்த பலராலும் இக்கோயில் சீரமைக்கப்பட்டு ஊரின் மத்தியில் பெரியளவில் கட்டப்பட்டது. |
|
0 comments: (+add yours?)
Post a Comment